சீனாவில் கைப்பந்து விளையாடியபோது குழந்தை பெற்ற வீராங்கனை – புதரில் வீசிய கொடூரம்…!!
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் சாங்ஸிங் நகரில் பெண்களுக்கான தேசிய கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. அதில் 18 வயது வீராங்கனை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். கர்ப்பினி ஆன இவர் யாருக்கும் தெரியாமல் அதை மறைத்து வந்தார்.
இந்த நிலையில் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எனவே மைதானத்தில் இருந்து நைசாக வெளியே வந்த அவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
அங்கு யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்றாள். பின்னர் அக்குழந்தையை அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு ஒன்றும் நடக்காதது போன்று மீண்டும் மைதானத்துக்கு வந்து கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டார்.
இதற்கிடையே அந்த வழியாக செனற ஒருவர் குழந்தையை பார்த்து அதை காப்பாற்றினார். பின்னர் தரையில் ரத்தம் வழிந்த தடத்தை வைத்தே விளையாட்டு மைதானம் வந்து குழந்தையை பெற்று வீசி சென்ற வீராங்கனையை கண்டுபிடித்தார்.
Average Rating