ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்..!!
Read Time:1 Minute, 12 Second
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் ஏ.சி. பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி இதர பெட்டிகளுக்கும் பரவாத வகையில் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இங்குள்ள ஆறாவது நடைமேடையில் நின்றிருந்த அந்த ரெயிலின் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்ததற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கருதும் தென்னக ரெயில்வே அதிகாரிகள், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது நல்லவேளையாக அந்த ஏ.சி. பெட்டியில் பயணிகள் யாருமில்லாததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.
Average Rating