தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிப்பு: அண்ணன்-தம்பி வெறிச்செயல்…!!
மகாராஷ்டிர மாநிலத்தில் தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை புறநகர்ப் பகுதியான ஆகாசான் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி, கடந்த 20-ம் தேதி மாலை ராக்கி தயாரிக்கும் பொருட்கள் வாங்குவதற்காக தனியாக கடைக்குச் சென்றுள்ளார். மாத்ரே நகர் ஏரி அருகே நடந்துசென்றபோது அவரது தோழியின் உறவினர் ஒருவர் தனது ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள ஒரு குடிசைக்குள் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அண்ணன்-தம்பி சேர்ந்து அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். பின்னர் இரவு 11.30 மணிக்கு விடுவித்துள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்தி கற்பழித்த அவினாஷ் சந்திரகாந்த் பாட்டீல், அவரது சகோதரர் பாவேஷ் பாட்டீல் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Average Rating