பாகிஸ்தானில் 11 வயது இந்து சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை..!!
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின் மகனான 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின் மகனான 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
சிந்து மாகாணம், கராச்சி நகரில் டாக்டராக தொழில் செய்து வருபவர், சேத்தன் குமார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் கடந்த மாதம் 13-ம் தேதி இங்குள்ள ஐதராபாத் கிளப்புக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது சுமார் 11 வயது மதிக்கத்தக்க அவரது மகன் திடீரென்று காணாமல் போனான்.
பின்னர், சுமார் ஒருமணி நேரம் கழித்து முகம் மற்றும் உடலின் பிறபகுதிகளில் ரத்த காயத்துடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் அவனது பிணம் மிதந்தது. மகனின் மர்ம மரணம் பற்றி ஆய்வு செய்வதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தந்து உதவுமாறு சேத்தன் குமார் விடுத்த கோரிக்கைக்கு கிளப் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மகன் காமவெறி பிடித்த ஓரினச் சேர்க்கையாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதாக சேத்தன் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்து மாகாண அரசு உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள இந்து மதத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி., சிந்து மகாணசபை எம்.எல்.ஏ. ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
Average Rating