65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!!
ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனிமையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஸ்ரீகாளஹஸ்தி தெலுங்கு கங்கை காலனியை சேர்ந்த யஷ்வந்த் (வயது 23) என்பவர், மூதாட்டியை பார்த்து விட்டு பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்துள்ளார்.
பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த அவர், மூதாட்டியை வலுக்கட்டாயமாக பள்ளியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த மூதாட்டி சத்தம்போட்டு அலறவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் யஷ்வந்த் தப்பியோடி விட்டார்.
இதுபற்றி மூதாட்டி ஸ்ரீகாளஹஸ்தி 2–டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய யஷ்வந்த்தை தேடி வந்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடகிஷோர் உத்தரவின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நாயக், ஏட்டுகள் சரத், கிருஷ்ணய்யா, கண்ணய்யா ஆகியோர் நேற்று யஷ்வந்த்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கு முன்னதாக தனியாக நடந்து சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும், சிறுமியை கொலை செய்ய முயன்றது. வீடுகளில் புகுந்து திருடிய சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதோடு பல வழக்குகளில் கைதாகி சிறை சென்றதாகவும் கூறினார். இதையடுத்து யஷ்வந்த்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating