கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை விபசார விடுதியில் விற்ற தாய்…!!

Read Time:3 Minute, 50 Second

201606131423193732_Mother-sold-her-daughter-in-prostitution_SECVPFஐதராபாத்தை சேர்ந்தவர் பூஜா. இவரது கணவர் ராஜூ. இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். பூஜாவுக்கும், ராஜூவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில் பூஜாவுக்கு வில்சன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதலன் வில்சனுடன் பூஜா சேர்ந்து வாழத்தொடங்கினார். பூஜாவுடன் அவரது மகளும் தங்கி இருந்தார்.

பூஜா வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவரது மகளை வில்சன் கற்பழித்தார். பூஜா வீட்டுக்கு திரும்பியதும் நடந்த சம்பவத்தை மகள் அவரிடம் தெரிவித்தார். அதற்கு மகள் மீது பூஜா கோபப்பட்டார். இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

இந்த நிலையில் பூஜா தனது மகளை அழைத்துச்சென்று விஜயவாடாவில் உள்ள ஒரு பெண்ணிடம் விற்றார். அவர் 3 மாதம் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். பின்னர் மங்களகிரியில் உள்ள மற்றொரு பெண்ணிடம் விற்று விட்டார். அவர் சிறுமியை வைத்து பலமாதம் விபசாரம் செய்தார்.

பின்னர் பிரகாசம் மாவட்டம் சீராலா பகுதியை சேர்ந்த வாணி என்பவருக்கு விற்று விட்டார். வாணியும் அவளை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். வாணியின் காதலன் ஜிதீன் லாலும் சிறுமியை கற்பழித்தார். அதே போல் சீராலா போலீஸ் நிலையத்தில் ஊர்காவல்படை வீரராக வேலை பார்க்கும் ஒருவரும் சிறுமியை கற்பழித்தார்.

இந்த நிலையில் குண்டூரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக வாணி சிறுமியை ஆட்டோவில் அழைத்துச்சென்றார்.

போகும் வழியில் ஆட்டோ விபத்தில் சிக்கியது. இதில் வாணி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அப்துல் பாஷா என்ற வாலிபர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அவரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி அழுதார். அவர் சிறுமியை அங்கிருந்து அழைத்து சென்று தனது நண்பர்கள் உதவியுடன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

முதலில் அந்த சிறுமி அனாதை என்று போலீசார் கருதினார்கள். பின்னர் சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது பெற்ற தாயே சிறுமியை விபசார விடுதியில் விற்றது தெரிய வந்தது. கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக வாணியின் காதலன் ஜிதீன்பால், மற்றும் ஊர்க்காவல் படைவீரர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தாயார் பூஜாவையும், அவரது கள்ளக்காதலன் வில்சனையும் போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை கொன்ற வழக்கில் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு என்ன தண்டனை? வாதம் தொடங்கியது…!!
Next post கும்பகோணம் பள்ளி தீ விபத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30-ம் தேதி முதல் இறுதி விசாரணை…!!