7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது…!!
Read Time:1 Minute, 6 Second
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் நிந்தவூர் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 20ம் திகதி இரவு 07 வயதான சிறுமி ஒருவரை அவரது தந்தை சந்தேகநபரான வைத்தியரின் தனியார் மருந்து வழங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, சம்பந்தப்பட்ட வைத்தியரால் தனது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக, குறித்த தந்தை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அடுத்த மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Average Rating