தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் ; அவிசாவளையில் பரபரப்பு…!!
Read Time:1 Minute, 12 Second
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புவக்பிட்டிய பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே நேற்று இடம்பெற்ற மோதலில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அதிகாலை பெரும்பான்மை இன இளைஞர் குழுவொன்று தமிழ் இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதலிலேயே இந்த ஆறு பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
காயமடைந்தவர்களில் அறுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இருவர் அவிசாவளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.
Average Rating