அழகுராணிப் போட்டி நேர்காணலுக்குச் செல்லும் வழியில் கொள்ளையனை அடித்து உதைத்து வென்ற யுவதி..!!
பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர், அழகுராணி போட்டிக்கான நேர்காண லில் பங்குபற்றச் செல் லும் வழியில் கொள்ளை யன் ஒருவனை அடி த்து உதைத்து வீழ்த்தி விட்டு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
26 வயதான கேர்ஸ்டி கிறேஸ் எனும் இந்த யுவதி மொடலாகப் பணியாற்றுகிறார். அழகுராணி போட்டிகளிலும் அவர் பங்குபற்றுகிறார். அதேவேளை தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜூடோ மற்றும் கிராவ் மாகா போன்ற தற்காப்புக் கலைகளையும் அவர் பயின்றுள்ளார்.
அண்மையில் இவர் ‘மிஸ் யூனிவர்ஸ் கிரேட் பிரிட்டன்’ அழகுராணி போட்டியில் பங்குபற்றுவதற்காக அப் போட்டியின் பணிப்பாளருடனான நேர்காணலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது கேர்ஸ்டி கிறேஸின் கைப்பையை பறித்துக்கொண்டு ஓட நபரொருவர் முற்பட்டாராம்.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகர நெடுஞ்சாலையில் அவர் தனது வாகனத்தை நிறுத்தியபோது, இச் சம்பவம் இடம்பெற்றது. நபர் ஒருவர் அவரது கைப்பையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்டார்.
ஆனால், துரிதமாக செயற்பட்ட கேர்ஸ்டி கிறேஸ், அந் நபரை அடித்து உதைத்து வீழ்த்தினார். அக் கொள்ளையனிடமிருந்து தனது கைப்பையை கிறேஸ் மீளக் கைப்பற்றிக் கொண்டார்.
எனினும் இப் போராட்டத்தின்போது அவரின் தொலைபேசி வீதியில் வீழ்ந்து, அதன் மீது வாகனமொன்று ஏறிச் சென்றது. எவ்வாறெனினும் இச் சம்பவத்தின் பின்னர் அழகுராணி போட்டிக்கான நேர்காணலிலும் கேர்ஸ்டி கிறேஸ் பங்குபற்றினார்.
‘அந் நபர் நான் ஒரு சுலபமான இலக்கு எனக் கருதியிருக்கலாம். ஆனால், அவர் எதிர்பாராத விடயமே நடந்தது பல வருடங்களாக தற்காப்புக் கலைகளை பயி ன்று வருகிறேன்’ என கேர்ஸ்டி கிறேஸ் கூறினார்.
இது தொடர்பாக மிஸ் கிரேட் பிரிட்டன் அழகுராணி போட்டி அமைப்பின் தேசிய பணிப்பாளர் போலா அபான்டோனோட்டா கூறுகையில், ‘கிறேஸிடமிருந்து பெண்கள் கற்றுக்கொள்ள முடியும்.
பெண்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கும் அவர் ஒரு உதாரண மாகத் திகழ்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating