கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கிளி? அமெரிக்க சட்ட நிபுணர்கள் ஆராய்கின்றனர்…!!
சிக்கலான கொலைவழக்கு ஒன்றில் முக்கிய சாட்சியாக கிளி ஒன்றை அழைப்பது குறித்து அமெரிக்க சட்டநிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் 2015 ஆம் ஆண்டு அவரின் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மார்ட்டினை அவரின் மனைவி கிளென்னா துராம் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்ததாக அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இச்சம்பவத்தின்போது கிளென்னாவும் (48) தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். எனினும் அவர் காயத்துடன் தப்பினார்.
இந்நிலையில் அவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆபிரிக்க சாம்பல்நிற கிளியொன்று மார்ட்டினின் மரணத்துக்குப் பின்னர் அடிக்கடி “டோன்ட் ஷுட்!, டோன்ட் ஷுட்!” (சுடாதே! சுடாதே!) எனக் கூறிக்கொண்டிருக்கிறது.
மார்ட்டினுக்கும் அவரின் மனைவி கிளென்னாவுக்கும் இடையிலான மோதலின் இறுதிக்கட்டத் தில் கூறப்பட்ட வார்த்தைகளையே மேற்படி கிளி கூறுகிறது என மார்ட்டினின் உறவினர்கள் கருதுகின்றனர்.
21 வயதான மேற்படி கிளியை மார்ட்டினின் முன்னாள் மனைவியான கிறிஸ்டினா தற்போது வளர்த்து வருகிறார்.
இக்கிளியை சாட்சியாக நீதிமன்றத்தில் பயன்படுத்த முடி யுமா? என மிச்சிகன் மாநில வழக்குத் தொடுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
Average Rating