ரயிலில் மோதி மாணவி பலி…!!
Read Time:57 Second
அம்பலன்கொட – கரித்தகந்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து – காலி நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளார்.
தனியார் வகுப்புக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் சம்பவத்தில் பலியானவர் அம்பலன்கொட – கொடஹேன பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating