மைத்துனியை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆட்டோ டிரைவரை கொலை செய்தேன்: அக்காள் கணவர் வாக்குமூலம்…!!

Read Time:7 Minute, 47 Second

201607301134195100_auto-driver-murder-case-arrested-brother-in-law-statement_SECVPFவாலாஜா பஞ்சுபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் (வயது 26). இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கார்த்திக், வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். மாணவியை கடத்திச்சென்று கார்த்திக் ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பள்ளூர் கிராமத்தில் இருந்து கோவிந்தவாடிஅகரம் செல்லும் சாலையில் வாகனத்தை ஏற்றிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கார்த்திக் பிணமாக கிடந்தார்.

ஆட்டோ டிரைவர் கார்த்திக் கொலையில், மாணவியின் அக்காள் கணவர் சார்லஸ் என்பவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனப் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சார்லஸ் (33) மற்றும் அவரது நண்பர் விமல்ராஜ் (31) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம், சார்லஸ் தெரிவித்த பரபரப்பான வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் சொந்தமாக சரக்கு ஏற்றும் மினிவேன் வைத்து ஓட்டி வருகிறேன். எனக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. என்னுடைய மனைவியின் சொந்த ஊர் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். என்னுடைய மனைவியின் தங்கை வாலாஜாவில் உள்ள ஒரு அரசு கலை கல்லூரியில் பி.எஸ்சி., 2-ம் ஆண்டு படித்து வந்தாள். அவள் மீது எனக்கு அதிக பாசம் உண்டு.

அவளை நன்றாக படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்தேன். ஆட்டோ டிரைவருடன் அவள் ரகசிய திருமணம் செய்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. பின்னர் மனைவியின் தங்கை (மைத்துனி) எங்களோடு வந்துவிட்டார். என்னுடைய மைத்துனியின் நினைவாகவே கார்த்திக் 2 நாட்களாக மதுபோதையில் இருப்பதாக, நான் நண்பர்கள் மூலம் அறிந்தேன். கார்த்திக் உயிரோடு இருக்கும் வரை மைத்துனியை நிம்மதியாக வாழ விட மாட்டான் எனக் கருதினேன்.

அவளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இருந்தோம். கார்த்திக் உயிரோடு இருந்தால், மைத்துனியை வாழ விட மாட்டான் எனக்கருதி, சதித்திட்டம் தீட்டி அவனை கொலை செய்ய நினைத்தேன். நானும், நண்பர் விமல்ராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்ய காத்திருந்தோம். கார்த்திக்கை தேடி கொண்டு மினிவேனில் சென்றோம். அவன், வாலாஜா அருகே நின்றிருந்தான்.

அவனை சந்தித்து உனக்கு எனது மைத்துனியை 2-வதுதாக திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறினேன். உடனே அவன் திருமண ஆசையில் தான் வீட்டுக்குச் சென்று தாலி எடுத்து வருவதாக கூறி, அவனுடைய வீட்டுக்குச் சென்று தாலி ஒன்றை எடுத்து வந்து எங்களோடு மினிவேனில் வந்தான். மினிவேனில் நாங்கள் 4 பேரும் சேர்ந்து வாலாஜாவில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்குச் சென்று மது குடித்தோம். வாலாஜாவில் இருந்து கார்த்திக்கை மினிவேனில் அழைத்துக் கொண்டு என்னுடைய வீடான கட்டளை கிராமத்துக்குச் சென்றோம்.

என்னுடைய வீட்டில் 4 பேரும் உணவு சாப்பிட்டோம். பின்னர் இரவு 7 மணியளவில் என்னுடைய வீட்டில் இருந்து கிளம்பி ஓச்சேரிக்கு வந்தோம். அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானத்தை வாங்கி குடித்தோம். பிறகு எங்களுக்கு தேவையான மதுபானத்தை வாங்கி மொத்தமாக வைத்துக் கொண்டோம்.

இரவு 9 மணியளவில் ஓச்சேரியில் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் வழியாக வேலூர் மாவட்டம் பள்ளூர் கிராமத்தில் உள்ள கோவிந்தவாடிஅகரம் செல்லும் மண் சாலையில் சென்றோம். மண் சாலையில் ஓரிடத்தில் அமர்ந்து 4 பேரும் மது குடித்தோம். நான் மது குடிப்பது போல பாவனை செய்து விட்டு, கார்த்திக்குக்கு நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்தோம். போதை தலைக்கேறியதும் நாங்கள் அங்கேயே மண் சாலையில் படுத்துத் தூங்கினோம்.

நான் கண் விழித்து பார்த்தபோது கார்த்திக் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தான். நண்பர்கள் 2 பேரை சத்தம்போடாமல் எழுப்பி மினிவேனில் ஏற்றிக்கொண்டேன். சரக்கு ஏற்றும் மினிவேனை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டி வந்து கீழே படுத்திருந்த கார்த்திக் மீது ஏற்றிக்கொலை செய்தேன். பின்னர் நாங்கள் அனைவரும் மினிவேனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம். வாகனத்தை ஏற்றி கார்த்திக் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியது. இதுதொடர்பாக எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

மேற்கண்டவாறு சார்லஸ், போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சார்லஸ், விமல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் கொலை வழக்குத் தொடர்பாக ஓச்சேரி கரிவேடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?
Next post செங்கோட்டை அருகே சேர்ந்து வாழ முடியாததால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி..!!