விஜய்-அமலா பால் நீதிமன்றத்தில் சந்திப்பு-..!!!
விஜய்-அமலா பால் விவாகரத்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எத்தனையோ பேர் அறிவுரை கூறியும் இவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இருவருமே நீதிமன்றத்தில் தங்கள் விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய வந்தனர், அப்போது சுமார் 15 நிமிடம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர்.
ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்க கூட இல்லையாம், ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம், மனு தாக்கல் செய்த பிறகு இரண்டு பேரும் தனித்தனி காரில் ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.மேலும் நடிகை, அமலா பால் இயக்குனர் விஜய்யிடம் இருந்து ஜீவனாம்சமோ, சொத்துக்களோ எதிர்பார்க்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.விஜய்யிடம் இருந்து பிரச்சனை இல்லாமல் விவாகரத்து பெற்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளாராம் அமலா. அதனால் தான் ஜீவனாம்சம் கூட கேட்கவில்லை என்று பேசப்படுகிறது
Average Rating