17 மாணவிகள் துஷ்பிரயோகம் – இருவர் கைது..!!

Read Time:1 Minute, 40 Second

257660823arres5கண்டி – கந்தானை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் சில மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குறித்த நபர் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி – கந்தானை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில், 17 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அண்மையில், கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கல்வி நிலையத்தின் பிரதான விரிவுரையாளராக கடமையாற்றிய ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்தனர்.

இதனையடுத்து, இரண்டாவது சந்தேகநபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, இன்று அதிகாலை அவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளார்.

கண்டியிலுள்ள வர்த்தகரான இந்த சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக அன்னியச் செலவாணியை கொண்டுவரும் வௌிநாட்டவர்களுக்கு வதிவிட விசா..!!
Next post பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!!