யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…!!
Read Time:1 Minute, 21 Second
யாழ்ப்பாணம் கண்டி வீதி பளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 5 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களும் காயமுற்ற நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating