பிரகாஷ் ராஜ் கையால் ஜி.வியை அடிவாங்க வைத்த பாலாஜி…!!

Read Time:5 Minute, 5 Second

201609151104371577_gv-prakash-give-kik-to-prakash-raj-for-rj-balaji_secvpfஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தில் நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் உருவாகும் 25-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது அந்த விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், நான் இன்றோடு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் 25 வருஷமாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருப்பது அதிசயமான ஒன்று. தாணு சார் மாதிரியான ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்.

அதன்பிறகு, இயக்குனர்களிலேயே அதிகமான உதவி இயக்குனர்கள் வைத்திருக்கிற ஒரேயொரு இயக்குனர் எம்.ராஜேஷ்தான். அதாவது 20-க்கும் மேலே அவருக்கு உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். பாதி பேருடைய பெயரை எனக்கு தெரியாது. ஒவ்வொரு பகுதியாக வந்து சீன் சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதில் இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், பொன்ராம் மாதிரியான இயக்குனர்கள் ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்தபிறகும் இந்த படத்துல வந்து உதவி இயக்குனராக பணிபுரிஞ்சிகிட்டு இருந்தாங்க. அவரை மாதிரி ஹிட் கொடுத்த பல இயக்குனர்கள் மறுபடியும் தன்னுடைய இயக்குனரிடம் வந்து மீண்டும் உதவி இயக்குனராக பணிபுரிகிறார்கள் என்றால் எந்தளவுக்கு அந்த இயக்குனர் மீது அவர்களுக்கு அன்பு இருக்கவேண்டும் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல், அவருடன் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கும் படம் பண்ண வாய்ப்பு அமைத்துக் கொடுப்பார் ராஜேஷ். அதேமாதிரி, என்னிடம் 8 உதவி இயக்குனர்கள் வந்து கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிடமும் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். என்னுடன் நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, ஆனந்தி இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் பாலாஜி வேற லெவல். பிரகாஷ் ராஜ் சாரிடம் நடிப்பது இதுதான் முதல் முறை. சாதாரணமாக அவர்கூட நடிப்பது பயமாக இருக்கும். இதில், அவரை திட்டி நிறைய வசனங்கள் இருக்கும். அதுக்கு முன்னாடி, அவரை ஏதாவது கேட்டு சொல்லி பாலாஜி வெறுப்பேற்றி விடுவான். இதில், கடுப்பான பிரகாஷ்ராஜ் அவரிடம் நாங்கள் அடிவாங்கிற காட்சிகளிலெல்லாம் உண்மையிலேயே எங்களை போட்டு அடித்து விடுவார். பாலாஜியால் நான் அவரிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, தனஞ்செயன், பி.எல்.தேனப்பன், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், நாசர், மனோபாலா, ரோபோ சங்கர், சந்தானம் இயக்குனர்கள் சசி, பொன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் டி.சிவாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –12)
Next post வேட்டையாடப்பட்ட கனவு…!!