பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள்…!!
பெங்களூர் கிழக்கில் உள்ள கேஜிஹல்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் பானு (வயது38).
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சாராய் பாளையத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இம்ரான் பெயரில் உள்ள எல்லா சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றும்படி யாஸ்மின் பானு வற்புறுத்தி வந்தார். ஆனால் இம்ரான் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து பல லட்சம் ரூபாயை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் இம்ரானால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் யாஸ்மின் இருக்கும் இடம் பற்றி இம்ரானுக்கு தெரிய வந்தது. அதோடு பணம் பறிப்பதற்காக அடுத்தடுத்து 7 பேரை ஏமாற்றி யாஸ்மின் திருமணம் செய்து இருப்பதும் தெரிய வந்தது.
இதுபற்றி இம்ரான் கேஜி ஹல்லி போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என் மனைவி யாஸ்மின் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். என்னை விட்டு பிரிந்த பிறகு அவர் அப்சல் சோயிப், சையத் ஷேக், ஈராஜ், ஆசிப் உள்பட 6 பேரை திருமணம் செய்துள்ளார்.
அவர்கள் அனைவரிடமும் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
எங்கள் 7 பேரிடமும் பறித்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து நான் கேட்டபோது என்னை தாக்கினார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
எனவே அவர் மீது கொலை முயற்சி வழக்கு, மோசடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான் அந்த மனுவில் கூறி இருந்தார். அவரைத் தொடர்ந்து அப்சல், சோயிப் ஆகியோரும் போலீசாரிடம் யாஸ்மின் பற்றி புகார் அளித்தனர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று 3 பேரும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் யாஸ்மின் பானுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating