காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு- உறவினர்கள் முற்றுகை…!!

Read Time:2 Minute, 6 Second

201609211710204217_undertrial-youth-dies-in-police-station_secvpfசென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்ற வாலிபரை குற்ற வழக்கில் கண்ணகி நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக்கிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

கார்த்திக் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் இன்று காலை கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கார்த்திக்கை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கண்ணகி நகர் காவல் நிலையம் அருகே போலீஸ் வாகனம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். தரையில் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!!
Next post எஜமானை அழைத்துவர விமான நிலையம் சென்ற நாய்: வைரலாகும் வீடியோ…!!