13 வயது சிறுமியை பணம் கொடுத்து வன்புணர்வுக்குட்படுத்திய 12 வயது சிறுவன் கைது…!!
13 வயதான சிறுமி ஒருவரை பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 12 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
13 வயதான சிறுமியை காட்டுப் பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணம் கொடுத்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டி மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர்.
கெக்குலாகொட வௌகம பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுவனின் தந்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், தாய் வெளிநாட்டில் பணியாற்றுவதாகவும் சிறுவன் அதிகளவு ஆபாசபடங்களை பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating