கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து! ஒருவர் படுகாயம்…!!
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஏ-35 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதி தப்பிச் சென்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பின்னால் வந்த கப்ரக வாகனம் மோதியுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குளாகியது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் குழந்தையும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.
முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating