பாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார்கள் சேலை அணிந்து செல்வது கட்டாயமல்ல..!!
பாடசாலை ஒழுங்கு விதிமுறைகளுக்கமைவாக எந்தவொரு ஆடையையும் அணிந்து கொண்டு பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பெற்றோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அது தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மஹவ கஜபா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பெற்றோர் அணியவேண்டிய ஆடைகள் தொடர்பில் சில பாடசாலைகள் வெளியிட்டுள்ள அறிவித்தலினால் வேலைக்குச் செல்லும் பெற்றோர் இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். சில பாடசாலைகள் தாய்மார் பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அல்லது பொருத்தமான ஆடைகள் அணிவதனை கட்டாயமாக்கியுள்ளனர்.
அந்த அறிவித்தலினால் தலைநகர் மற்றும் நகரங்களில் தொழில் புரியும் பெண்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குள் அழைத்துச் செல்ல முடியாது நுழைவாயிலுடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேலை நேரத்தில் பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் தாய்மார் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே குறித்த விதிமுறை தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக அதிருப்தி தெரிவித்து வந்ததுடன் சிலர் தமது உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அது தொடர்பாக பரிசீலனை செய்து பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் பெற்றோரின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது என்றார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating