மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைப் பறித்த உதயதேவி…!!
உதயதேவி ரயில் மோதியதில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அலியார் செய்யது இப்ராஹிம் (வயது 45) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த உதயதேவி ரயிலில் மோதுண்டே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மேற்படி நபர் நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த நபர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating