4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் கைது…!!
Read Time:1 Minute, 4 Second
4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
44 வயதான குறித்த அதிபர் எல்ல கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் தரம் 11 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த 4 மாணவர்களை இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முதலும் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை துஸ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் தொடர்பு பட்டவர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Average Rating