ஆப்கானிஸ்தானில் சீக்கியரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்…!!
சர்தார் ரவைல் சிங் என்ற சீக்கியர் ஜலாலாபாத்தில் வசித்து வந்தார். நேற்று காலையில் சில தீவிரவாதிகள் அவரது வீட்டிற்கு ராணுவ உடை அணிந்து வந்துள்ளனர். அவர்கள் ரவைல் சிங்கை கடத்திச் சென்றனர். பின்னர் காலிஸ் பமில் என்ற பகுதியில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சீக்கிய அமைப்பினர் ரவைல் சிங்கின் உடலை மாகாண கவர்னர் வீட்டின் முன் வைத்து போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், பாதுகாப்பு குறைபாடே கொலைக்குக் காரணம் என்றும், அரசு கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், துணை கவர்னர் மொகமது ஹனீப் கார்டிவால் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டார். அப்போது, இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடிவருவதாகவும் கூறினார்.
Average Rating