ம.பி.யில் நீர்தேக்கத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி…!!
Read Time:1 Minute, 24 Second
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து லடேரிக்கு 32 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பஸ் மதியம் மூன்று மணியளவில் பாலி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சஞ்சய் சாகர் அணையினால் நீர் தேங்கி நிற்கும் பகுதியை கடப்பற்காக கட்டபட்டுள்ள பாலம் வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்த்தேக்கத்திற்குள் விழுந்தது. இதில் பஸ்சில் சென்ற 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். பஸ்சில் இருந்தவர்கள் சுமர் 20 அடி நீருக்குள் மூழ்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
போலீசார் விசாணையில் சாலையில் இருந்த பள்ளத்தில் டயர் இறங்காமல் இருக்க பஸ்சை திருப்ப முயற்சி செய்யும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததுதான் விபத்திற்கு காரணம் தெரியவந்துள்ளது.
Average Rating