பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை…!!
Read Time:42 Second
பீகார் மாநிலம் கோட்டச் பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கையூம் அன்சாரி.
இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து போலீஸ் அதிகாரி அன்சாரி அதே இடத்தில் பலியானார். தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Average Rating