பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தி.மு.க. பிரமுகர்: 10-க்கும் மேற்பட்டோர் காயம்…!!
பொள்ளாச்சி அடுத்த பெரியபோது காந்தி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கிற மணி குமார்(வயது40). இவர் பெரிய போது பகுதி தி.மு.க. பிரமுகர்.
இவர் தற்போது ஆனைமலை ஒன்றியம் 3-வது வார்டுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நேற்று வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தனது காரில் பொள்ளாச்சிமீன்கரை சாலையில் வீட்டுக்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது செல்லும் வழியில் ஜமீன் ஊத்துக்குளி தாண்டியவுடன் நஞ்சே கவுண்டன்புதூர் பகுதியில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது.
இதில் ரோட்டோரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைதொடர்ந்து காயம் அடைந்த 10 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
அப்போது காரில் இருந்த மணிக்குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் துரத்திசென்று பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொது மக்கள் தாக்கியதில் காயம் அடைந்த தி.மு.க. பிரமுகர் மணிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating