முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு..!!

Read Time:1 Minute, 32 Second

201610052032529428_admk-worker-suicide-for-jayalalithaa-recovery_secvpfமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் உடல்நலம் பெற வேண்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கணேசன் என்பவர் இன்று மாலை தீக்குளித்தார். இதனால் அவரது உடல் வெந்தது. உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 30 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடுகுப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சரணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் இரண்டு ஆண்டு ஜெயில்..!!
Next post குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்..!!