பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!
திருவனந்தபுரம், சிறையின்கீழ், தம்பானூர், வலியத்துறை, செறியத்துறை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக திருவனந்தபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இப்புகார்களில் மாணவிகளை பலாத்காரம் செய்த வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என கூறியும், டெக்னோபார்க் ஊழியர் என ஏமாற்றியும் அவர்களை கடத்திச் சென்று கற்பழித்தது தெரிய வந்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் போலீஸ் உயர் அதிகாரிகள் வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அவர்கள் வாலிபரை பிடிக்க ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிளஸ்-1 மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி தம்பானூர் பகுதிக்கு வாலிபர் அழைத்துச்செல்வது தெரிய வந்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்த சஜ்ஜு என்ற சாம்சன் (வயது 28) என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் சாம்சன் இது போல எத்தனை பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating