யாழில் 2.5 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது :முன்னாள் போராளி என சந்தேகம்…!!
யாழ்ப்பாணம் மணற்காட்டு பகுதியில் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் 32 வயதுடைய முன்னாள் போராளி என சந்தேகிக்க கூடியவர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்று (11) காலை மணற்காட்டு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் தன்வசம் வைத்திருந்த 12.1 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் கொழும்பிற்கு கஞ்சா பொதியை கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்தநபரிடம் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நபரை பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த சந்தேகநபரின் உடலில் ஷெல் சன்னங்கள் பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் இவர் முன்னாள் போராளியாக இருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating