கொழும்பு கொள்ளுப்பிட்டி குண்டுத் தாக்குதல்
Read Time:1 Minute, 9 Second
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசா வர்த்தக மையப் பகுதியில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் புலிகள் மேற்கொண்ட பாரிய குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் மூன்று சிவிலியன்களும், நான்கு இராணுவ கொமாண்டோக்களும் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் பாதுகாப்புக்காக சென்ற டிபென்டர் ரக வாகனமே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் 8 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.