சரிகாவுக்கு தேசிய விருது! ராணி¬முகர்ஜிக்கு ஆப்பு!!
சிறந்த நடிகைக்கான தேசியவிருது பெற கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்களை தேர்வு செய்ய கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.
இதில், அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பிளாக் படத்தில் நடித்ததற்காக அமிதாப்புக்கு விருது கிடைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிதான் இப்படத்தை இயக்கியுள்ளார். 3வது முறையாக அமிதாப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு வழங்கப்படுகிறது. குரஜாத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பர்ஸானியா என்ற படத்தில் வன்முறையில் காணாமல் போன தனது மகனைத் தேடும் பார்ஸி இனப் பெண்ணாக நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார் சரிகா. இதற்காக அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த படமாக கபில புருஷ் என்ற வங்காள மொழிப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை புத்ததேவ் தாஸ்குப்தா டைரக்ட் செய்துள்ளார். தவிர இக்பால் என்ற இந்தி படத்தில் நடித்த நஸ்ருதீன் ஷாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த டைரக்டருக்கான விருது பிரதீப் சர்காருக்கு அறிவிக்கப்படவுள்ளது. பரினீதா என்ற படத்துக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் சிறந்த படமாக ரங்தே பசந்தி என்ற படம் தேர்வாகி உள்ளது. இந்த படத்தை ராகேஷ் மெஹ்ரா டைரக்ட் செய்துள்ளார். மிக சிறந்த குறும்படமாக அபர்னா சென் டைரக்ட் செய்த 15 பார்க் அவனூத்ரு என்ற ஆங்கிலப் படம் தேர்வாகியுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில் தென்னிந்திய கலைஞர்கள் எவரையும் காணோம் என்பது பெருத்த ஆச்சரியமாக உள்ளது.
இதற்கிடையே சிறந்த நடிகைக்கான விருது ப்ளாக் படத்திற்காக தனக்கு கிடைக்கும் என்று இந்தி நடிகை ராணி முகர்ஜியும், அவரது குடும்பத்தினரும் மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால் நினைப்பில் மண்ணைப் போடும் விதமாக சரிகாவுக்கு விருது கிடைத்துள்ளது ராணி முகர்ஜி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராணி முகர்ஜியின் தந்தை ராம்¬முகர்ஜி இதுகுறித்துக் கூறுகையில்,
சிறந்த நடிகைக்கான விருது ராணிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சரிகாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருந்தாலும் ராணி முகர்ஜிக்குத்தான் சிறந்த நடிகைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
விருதுப் பட்டியல் பாலன்ஸே இல்லாமல்இருப்பது போலத் தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக பட்டியல்வெளியானால்தான் என்ன ‘நடந்திருக்கும்’ என்பதை ஊகிக்க முடியும்!

More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...