புதினா ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்…!!
புதினா நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ள கீரை வகை. இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பற்கள், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குணம் தருகிறது.
அதுமட்டுமல்லாமல் புற்று நோயை வரவிடாமல் தடுக்கும், கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என பார்க்கலாம்.
வயிற்று வலி:
புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்.
புற்றுநோய்:
பெரிலைல் ஆல்கஹால், என்ற பொருள் குடல் மற்றும் இரைப்பை புற்று நோய் வரவிடாமல் தடுக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இது புதினாவில் அதிகம் உள்ளது.
சரும பாதிப்புகள்:
புதினா சாறு பாக்டீரியாக்களின் தொற்றால் உண்டாகும், மரு, பருக்கள் ஆகியவற்றை நீக்கிவிடும். சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும்.
அலர்ஜி:
காக்ஸ் -1 காக்ஸ்-2 என்ற இந்த இரு என்சைம்களும் வலி மற்றும் அலர்ஜியை உண்டாக்குபவை. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தும், ரோஸ்மரினிக் அமிலம் புதினாவில் உள்ளது. ஈசனோபில் என்ற அலர்ஜியை தூண்டும் ரத்த செல்களை கட்டுப்படுத்துகிறது புதினா. இதனால் அலர்ர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகளை குறைக்கும்.
மன அழுத்தம்:
புதினா நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். இதில் விட்டமின் ஏ,பி, மற்றும் ஈ ஆகியவை உள்ளது. இது மாதவிலக்கு சமயத்தில் வரும் மன அழுத்தம் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்தும். தீவிர வேலைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
காய்ச்சல் ஜலதோஷம்:
ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. நுரையீரலை சுத்தப்படுத்தும். பலப்படுத்தும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating