மெக்சிகோவில் 14 பேர் சுட்டுக்கொலை…!!

Read Time:1 Minute, 17 Second

201612070909461538_mexico-14-gunmen-killed-in-shootout-with-police-in-veracruz_secvpfமெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் நேற்று போலீசாருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். போலீசாருக்கு ஆதரவாக கடற்படை வீரர்களும் சண்டையிட்டனர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஆயுதம் ஏந்திய நபர்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலர் அருகில் உள்ள மலைப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னுடன் வள்ளியாக ஜெயலலிதா எப்படிப்பட்டவர் – மனம் திறந்த சிவகுமார்..!!
Next post தொழிலில் நஷ்டம்: மனைவி, 2 மகள்கள் கழுத்தை இறுக்கி கொலை…!!