லண்டனில் ரூ.75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு: தடுக்க முயன்றவருக்கு கொலை மிரட்டல்…!!
லண்டன் மாநகரில் பட்டாப்பகல் வேளையில் 40,000 பவுண்டு மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோஹோ சதுக்கத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு பேர் கொண்ட குழு ஒன்று குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளது. ஆயுதங்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இந்த கும்பல் குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40,000 பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.74,88,272) மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருட முற்பட்டுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த சிலர் குறித்த திருட்டை தடுக்க முயன்றுள்ளனர். தடுக்க முயன்றவர்களை அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அச்சிறுத்தியுள்ளது.
இதனால் அந்த கும்பலை தடுக்கவோ திருட்டை முறியடிக்கவோ எவரும் துனியவில்லை எனறு கூறப்படுகிறது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தை பிரேசில் நாட்டவரான ஓரு சுற்றுலா பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதனிடையே மோட்டார் சைக்கிளில் பூட்டை உடைத்து அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது. இதில் குறித்த மோட்டார் சைக்கிளை உடன் வந்த நபர் எட்டி மிதித்ததில் நிலை குலைந்து எதிரே வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
இதனால் கவிழ்ந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு குறித்த திருடர்கள் இருவரும் மாயமாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் மாயமான திருடர்கள் இருவரையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.
Average Rating