ஐதராபாத் கட்டிட விபத்து தொடர்பாக 4 பேர் கைது…!!
Read Time:1 Minute, 15 Second
ஐதராபாத் நகரில் உல்ல நனாகிரம்குடா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 7 மாடி கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது அடித்தளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்ததால், கட்டிட இடிபாடுகளில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating