பெயர் சொல்லும் வேடங்களில் நடிக்க ஆசை: ராஜகுமாரன்…!!
‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ படங்களை இயக்கியவர் தேவயானியின் கணவர் ராஜகுமாரன். ‘திருமதி தமிழ்’ படத்தை இயக்கி இவரே கதாநாயகனாகவும் நடித்தார்.
சமீபத்தில் சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் ‘கடுகு’ படத்தில் புலிவேட கலைஞராக நடித்திருக்கிறர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
“ ‘கடுகு’ படத்தில் நான் நடித்திருக்கும் வேடம் எனக்கு பொருத்தமானது என்று விஜய் மில்டன் சொன்னதால் நடித்தேன். அவர் சொன்னது போலவே இந்த வேடம் எனக்கு பொருத்தமாகவும், திருப்தி அளிப்பதாகவும் அமைந்தது. ஒரு நல்ல வேடத்தில் நடித்த மன திருப்தியையும் கொடுத்திருக்கிறது.
எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் நடித்தாலும், பெயர் சொல்லக்கூடிய வேடங்களில் நடிக்க வேண்டும். இது தான் எனது ஆசை”என்றார்.
Average Rating