ஜேர்மனியில் 12 பேர் மீது லொறி ஏற்றி கொன்றவர் ஓர் அகதி: வெளியான அதிர்ச்சி தகவல்…!!
ஜேர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஒன்றில் 12 பேர் மீது லொறியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் அந்நாட்டில் புகலிடம் கோரி வந்த அகதி என தற்போது தெரியவந்துள்ளது.
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நேற்று மாலை கிறிஸ்துமஸ் மார்க்கெட் என்ற இடத்தில் பொதுமக்கள் உற்சாகமாக ஷொப்பிங் செய்து வந்துள்ளனர்.
அப்போது, கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் நிழைந்த லொறி ஒன்று மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக ஏற்றிச் சென்றுள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 48 பேர் படுகாயம் அடைந்தனர்.
மக்கள் மீது தாக்குதலை நடத்திவிட்ட லொறி ஓட்டுனர் அங்கிருந்து தப்ப முயன்றபோது பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவனிடம் விசாரணை நடத்தியபோது அவன் பெயர் Naved B( 23) எனவும், பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி புகலிடம் கோரி ஒரு வருடத்திற்கு முன்னர் ஜேர்மனி நாட்டிற்கு வந்ததுள்ளான்.
பெர்லின் விமான நிலையத்திற்கு அருகே உள்ள அகதிகள் முகாமில் அவன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல், இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பெர்லினில் நடைபெற்ற இத்தாக்குதலை தொடர்ந்து ஜேர்மனியில் அதிகளவில் அகதிகளை அனுமதிக்கும் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிற்கு கண்டனம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating