மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கார்த்தி…!!

Read Time:1 Minute, 29 Second

201612221327248328_karthi-again-police-man-in-new-movie_secvpfகார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும், போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. முழுக்க முழுக்க சென்னையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்கவுள்ளனர். மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் மீட்பு…!!
Next post இந்த மாதிரி ஓட்டுனர்கள் இருந்தால் விபத்து நடக்கத்தான் செய்யும்..!! வீடியோ