மனிதர்களை மனிதர்களே சாப்பிட்ட கொடுமை…!!
ரஷ்யாவில் 1917ஆம் வருடத்தில் சர்வாதிகாரி லெனின் ஆட்சி பொறுப்பேற்றார். பின்னர் 1921 ஆம் ஆண்டு உலக போர் ஆரம்பமானது. இந்த காலகட்டத்தில் அங்கு உணவு பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்து ஆடியது.
விவசாயிகள் தயாரிக்கும் உணவுகளை வேண்டுமென்றே லெனின் அவர்களிடமிருந்து அபகரித்து கொண்டார்.
இதனால் அந்த நாட்டில் 30 மில்லியன் மக்கள் உணவின்றி தவித்தார்கள். பட்டினி சாவு விழ ஆரம்பித்தது. 5 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட மக்கள் இறந்தார்கள்.
செய்வதறியாது திகைத்த மக்கள் ஒரு கொடூரமான முடிவுக்கு வந்தார்கள். பட்டினியால் இறந்த மனிதர்களின் உடல் பாகங்களை சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அதன் ஒரு படி மேலே போய் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை சாப்பிடுவதும், அதை பணத்துக்கு விற்பதும் என செய்து வந்தார்கள் அந்நாட்டு மக்கள்!
அங்கிருந்த சிறுவர், சிறுமியர் உணவு பஞ்சத்தால் ஊட்டசத்தின்றி எலும்பும் தோலுமாக காட்சியளித்தார்கள்.
இந்த கொடுமை 1921லிருந்து 1922 வரை நீடித்தது. அவர்களுக்கு அரசாங்கமும் காவல் துறையும் உதவாத சூழலில், அப்போது அங்கு வந்த அரசாங்க ஆய்வாளர் Fridtjof Nansen என்பவர் இந்த கொடுமையை பார்த்து மனம் வருந்தி பட்டினால் வாடும் மக்களுக்கு 900 சிறப்பு மையங்களில் உணவுக்கு ஏற்ப்பாடு செய்தார்.
இந்த சேவைக்காக அவருக்கு பின்னாளில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த பிரச்சனையெல்லாம் முடிவுக்கு வந்த பின்னர் சில வருடம் கழித்து அதாவது 1924ல் லெனின் காலமானார்.
Average Rating