தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வாலிபர் பலி..!!
Read Time:57 Second
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓமீர் (22). இவர் சென்னை கொத்தவாசல் சாவடியில் தங்கி இருந்து அதே பகுதி கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அந்த குடோனுக்கு சணல் மூட்டைகள் வந்தன. அதை ஓமீர் இறக்கினார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே குடோனில் இருந்த கழிவறையை கழுவும் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்தார்.
எரிச்சல் தாங்க முடியாமல் அலறினார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஓமீர் இறந்தார்.
Average Rating