பிரித்தானியா சாலையில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொடூர சம்பவம்..!!

Read Time:1 Minute, 39 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)பிரித்தானியாவில் பட்டப்பகலில் பொதுஇடத்தில் வைத்து நான்கு மர்ம நபர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெர்பி Normanton சாலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை பொலிசார் கைப்பற்றி வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில், நபர் ஒருவர் நடைமேடையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கிறார். திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர், அவரின் பின்பக்கத்திலிருந்து தாக்கி தரையில் போட்டு சரமாரியாக தாக்குகின்றனர்.

ஒருவன் அவரிடமிருந்து பணம் மற்றும் சில உடைமைகளை கொள்ளையடிக்கிறான். இதைக்கண்ட பொது மக்களில் ஒருவர் அவர்களை பிடிக்க முயல நான்கு பேரும் நான்கு திசையில் தப்பி ஓடுகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் நான்கு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியரை தாக்கிய 15 வயது சிறுவன்: 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்..!! (வீடியோ)
Next post மொட்ட சிவா கெட்ட சிவா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!