எரியும் நெருப்பு… விரும்பி சாப்பிடும் வினோத மக்கள் ? (வீடியோ)
Paan என்பது வட இந்தியாவில் மிகப்பிரபலமான உணவு ஆகும். இது வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
Paan என்பது வெற்றிலை உணவாகும், இதனுடன் பாக்கு மற்றும் தேவைப்பட்டால் புகையிலையும் சேர்க்கப்படுகிறது. அதாவது ஒரு முழு வெற்றிலையின் நடுவில் பாக்கினை வைத்து இதனை வட இந்தியர்கள் மென்று சாப்பிடுவார்கள்.
இதனை மென்றால் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதற்காக இதனை சாப்பிடுகிறார்கள்.
ஆனால், இதனை மென்று சாப்பிடுவதால் பற்கள் பாதிப்பு மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், டெல்லியில் Fire paan என்பது பிரபலமாக உள்ளது. அதாவது வெற்றிலையுடன் பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் இலையை சேர்த்து அதனுள் தீ வைக்கப்படுகிறது.
தீவைக்கப்பட்ட பின்னர், அதனை அப்படியே மடக்கி வாடிக்கையாளர்களின் வாயிற்குள் கடை ஊழியர்கள் திணித்து விடுகிறார்கள்.
இது ஒரு வகையில் ஆபத்தானது என்றாலும், அந்த தீயானது வாயிற்குள் செல்லும் முன் அணைந்துவிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. Paan வெற்றிலையே ஆபத்து என்றிருக்கையில், Fire Paan என்பது விபரீதமான ஒன்றாக கருதப்படுகிறது.
Average Rating