80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த சுவிஸ் குடிமகன் கைது..!!

Read Time:2 Minute, 18 Second

arrest (6)சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 80 சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் Fribourg மாகாணத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றத்திற்காக கடந்த 1980-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், விடுதலை ஆன நபர் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 1991-ம் ஆண்டு குடியேறி அங்கும் இதே குற்றங்களை செய்ததாக கூறப்படுகிறது.

இதே ஆண்டில் சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறிய அவர் தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் குடியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த சுமார் 80 சிறுவர்களிடம் இவர் அத்துமீறி செயல்பட்டதாக புகார் கூறப்பட்டது.

மேலும், சிலரை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

புகாரை பெற்ற பொலிசார் கடந்த 2015-ம் ஆண்டு நபரின் வீடுகளில் சோதனை செய்தபோது சிறுவர்களின் நிர்வாணப்படங்கள் சிக்கியுள்ளது.

பொலிசாரிடம் ஒரு சில குற்றங்களை மட்டும் ஒப்புக்கொண்டுள்ள அவர் சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த 2001-ம் ஆண்டு முதல் இவர் பல்வேறு பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுப்பட்டதாக பொலிசாருக்கு புகார் குவிந்துள்ளது.

புகார்களை பெற்ற பொலிசார் நபரை கைது செய்து தற்போது தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எரியும் நெருப்பு… விரும்பி சாப்பிடும் வினோத மக்கள் ? (வீடியோ)
Next post காலையில் உடலுறவு கொள்ள விரும்பும் ஆணா நீங்கள்?..!!