பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?..!!
பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.
சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரான்ஸ் அரசு நிதியுதவி வழங்கியது.
ஆனால், இந்த பணத்தை பெறுவதற்காக ‘தாக்குதலில் தாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டதாக’ கூறி பெற்றோர் இருவர் நாடகமாடியுள்ளனர்.
மேலும், இருவருக்கும் அரசு 60,000 யூரோ பணம் வழங்கியுள்ளது.
இந்த பணத்தை இருவரும் மிகவும் ஆடம்பரமாக செலவு செய்தபோது இருவரின் நாடகம் வெளியே கசிய தொடங்கியது.
பின்னர், இருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கணவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
எனினும், இத்தீர்ப்பினை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்தனர்.
இதுமட்டுமில்லாமல், கடந்தாண்டு யூலை மாதம் நைஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாங்கள் இருவரும் பாதிக்கப்பட்டதாக மீண்டும் நாடகமாடியுள்ளனர்.
இரண்டாவது முறையும் பெற்றோர் நடத்தியது நாடகம் என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இருவருக்கும் 30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் 19-ம் திகதி இருவருக்கும் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Average Rating