தவறான உறவு: மாமனாரை கொலை செய்த மருமகள்..!!
தவறான உறவுக்கு காரணமாக இருந்த மாமனாரை கொலை செய்த பெண்ணின் செயல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது.
வேலூரை சேர்ந்த சபீரா என்பவர் தனது கணவன் ஜிமாஜிகானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜிமாஜிகானின் சகோதரர் அப்துல் காதர் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இவர் இறந்து 8 மாதங்கள் கழித்து ஜிமானிகானின் தந்தையும் இறந்துள்ளார். அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவங்கள் நடைபெற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலைலயில், தனது கணவர் ஜிமாஜிகானை தொலைபேசியில் அழைத்த சபீரா, தனக்கும் கிருஷ்ணன் என்பருக்கும் தவறான உறவு இருந்ததாகவும், இதனை உங்கள் அப்பா மற்றும் அண்ணன் பார்த்துவிட்டதால் நான் தான் அவர்களை கொலை செய்தேன் எனவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு கோபம் அடைந்த ஜிமாஜி, இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, சபீராவை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating