பொது இடத்தில் வித்யாபாலனிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்..!!
‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். இவர் எப்போதும் ரசிகர்களுடன் நெருங்கி பழகும் தன்மை கொண்டவர். ரசிகர்களும் வித்யாபாலனிடம் அத்துமீறாமல் நடந்துகொள்வர். அதனால், தொடர்ந்து ரசிகர்களிடம் அன்பாக நடந்துகொண்டு வருகிறார் வித்யாபாலன்.
அப்படியிருக்கையில், சமீபத்தில் ரசிகர் ஒருவர் வித்யாபாலனிடம் அத்துமீறி நடந்துகொண்டுள்ளார். கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த வித்யாபாலன் ரசிகர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே சென்றிருக்கிறார். அப்போது, ரசிகர்களில் ஒருவர், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
உடனே வித்யாபாலனும் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அவருடன் செல்பி எடுக்க தயாரானார். அப்போது, அந்த ரசிகர் வித்யாபாலன் தோள்மீது திடீரென்று கையை போட்டுள்ளார். இதைப் பார்த்ததும் வித்யாபாலன் அந்த ரசிகரை எச்சரித்துள்ளார். உடனே மன்னிப்புக்கேட்ட ரசிகர், மீண்டும் வித்யாபாலனுடன் செல்பி எடுக்க கேட்க, மறுபடியும் அவரது தோள்மீது கையை வைத்துள்ளார் அந்த ரசிகர். இதையடுத்து, அந்த ரசிகரை பயங்கரமாக திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் வித்யாபாலன்.
இந்த செய்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யாபாலன் கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு சம்பந்தமான செய்திகளில் வித்யாபாலனும் தப்பவில்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரிய ஒன்று. ரஜினி-பா.ரஞ்சித் மீண்டும் இணையும் படத்திற்கு வித்யாபாலனை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
Average Rating