அரூர் அருகே பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது..!!

Read Time:4 Minute, 13 Second

201703171643085674_woman-murder-arrested-boy-friend-harur_SECVPFதர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அண்ணாலப்பட்டி தரைபாலத்தின் அடியில் நேற்று முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்ததார்.

இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிணத்தின் அருகே ஆதார் அட்டை கிடந்தது. இதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகரைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி லட்சுமி (47) என்பது தெரியவந்தது.

அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. லட்சுமியின் கணவர் ராஜா மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.அதன்பிறகு லட்சுமிக்கும், ஊத்தங்கரையை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் லட்சுமியுடன் இருந்த நெருக்கத்தை கார்த்திகேயன் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் லட்சுமி அவரை தொடர்ந்து தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நண்பர்களுடன் இருக்கும் போது அங்கு வந்து லட்சுமி அவரிடம் பலமுறை தகராறு செய்து வந்தார். இதனால் லட்சுமி மீது கார்த்திகேயனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்கான சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது கணவரின் பி.எப். பணத்தை எடுக்க சேலம் செல்ல வேண்டும் என கார்த்திகேயனிடம் கூறினார். உடனே அவரும் லட்சுமியை காரில் ஏற்றி கொண்டு சேலத்துக்கு புறப்பட்டார்.

வழியில் அரூரில் இருந்து சிந்தலபாடி செல்லும் வழியில் கடத்தூர் அருகே அண்ணலாப்பட்டி காட்டுப் பகுதிக்கு வந்தபோது லட்சுமி கார்த்திகேயனிடம் ‘உல்லாசமாக இருக்கலாம் வா’ என்று அழைத்தார். ஏற்கனவே அவர் மீது ஆத்திரத்தில் இருந்த கார்த்திகேயன் அவளை கொல்ல இதுதான் சரியான சமயம் என்று நினைத்து காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து லட்சுமி தலையில் தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனே லட்சுமியை சேலையால் கழுத்தை இறுக்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கார்த்திகேயன் கள்ளக்காதலியின் பிணத்தை தரைபாலத்தின் கீழே வீசிவிட்டு தப்பிவிட்டார்.

இதையடுத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகுமார் ஜோடியாகும் ஹன்சிகா?..!!
Next post மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!!!