மருத்துவமனையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!!!
அவுஸ்ரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்படும்போது உதவி செய்யாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரை சேர்ந்த 49 வயதான நபர் சில குற்றங்கள் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
கடந்த புதன் கிழமை அன்று ஜாமீனில் வெளியே வந்த அவர் ட்ராம் வாகனத்திற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துள்ளார்.
இந்நிலையில், 22 வயதான இளம்பெண் ஒருவர் ட்ராம் வாகனத்தில் ஏறியபோது அவரை பின் தொடர்ந்து நபரும் வாகனதில் ஏறியுள்ளார்.
ட்ராம் வாகனத்தில் பயணிகள் அதிகம் இல்லாத காரணத்தினால் இளம்பெண்ணிடம் அவர் அத்துமீறி நடந்துள்ளார்.
நபரின் செயல்களால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவமனை அருகில் ட்ராம் வாகனம் நின்றதும் திடீரென வெளியே தப்பியுள்ளார்.
ஆனால், இளம்பெண்ணை பின் தொடர்ந்த நபர் மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்னதாக பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், அதே இடத்திலேயே இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார். இக்காட்சியை கண்ட பயணிகள் யாரும் உதவிக்கு கூட வரவில்லை.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை காவலாளிகள் உடனடியாக சென்று இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
மேலும், பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பொலிசார் நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணை முடியும் வரை குற்றவாளியை யூன் மாதம் வரை வெளியே விடக் கூடாது எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating