உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை..!!

Read Time:1 Minute, 31 Second

abuse (22)உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

இந்த சம்பவம் காரணமாக வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க, சர்தாவல் பகுதியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு..!! (கட்டுரை)
Next post சீனாவின் சோங்கிங் நகரில் அடுக்குமாடி கட்டிடங்களின் நடுவே புகுந்து செல்லும் வகையில் ரயில் பாதை..!!